மூன்று நாளாய்
உணவில்லை...
உடம்பை மறைக்க
உடையில்லை...
ஊர்முழுக்க புழுதியில் ஆடி...
சின்ன முள்
தெய்த்த வலி பற்றி
குறைகூறும் மகனிடம்
எப்படி சொல்ல
அவன்
தந்தை இறந்ததை...
________________________
காலை...
நான்கு பரோட்டா,
பக்கத்து ஊர்
பிள்ளையார் கோவில்...
மதியம்...
சிக்கன் பிரியாணி,
அரசு நடத்தும் பொருட்காட்சி...
மாலை...
ஆறு வடை,
அங்காடி தெரு...
இரவு...
நூடுல்ஸ்,
அடுத்த தெரு திரை அரங்கம்...
ஊரிலிருந்து உறவினர் வந்தால்
உல்லாசமாய் தான் இருக்கிறது!
நாளும் வேகமாய்
நகர்கிறது...
மனம் நிறைய மகிழ்ச்சி
நினைவுகளுடன் நான்...
அம்மா டாமி பாவம்!
இன்னைக்கு பூரா
சாப்பிடலை!
இது என் மகள்...
___________________