Wednesday, July 1, 2009

கடந்த காலக் கவிதைகள்




உலகமே பொய்...
ஒப்புக்கொள்கிறேன்!
உன்னைத் தவிர
__________________________

நிஜத்தில் சொல்லப்போனால்....
உனக்காக, உன்னில்
உனக்கு மட்டும்
நான்
நானாய் இருக்கிறேன்...
___________________________

காணவில்லை!
என் காதலி அளித்த
முத்தத்தின் சுவடுகளை!
கண்டுபிடியுங்கள்...
முத்த சுவடுகளை!
அல்லது
என் காதலியை !
_____________________

இரு இதழுடன்
ரோஜா!
என்னவள்...
_____________________

முதல் கவிதை
எழுதப்பட்டது!
உன் விழி எனும்
பேனாவால்
என்
இதயப்பக்கத்தில்
____________________
அவள் இப்பவும்
அப்படித்தான்...
எதுவெனினும்
குத்திக் குத்தி
பேசுவாள்!
பெண் புத்தி
Pin புத்தி என்பது
இதுதானோ?
_____________________
நினைவு முட்களை
சுமந்து கொண்டே
உன்னை
சுற்றி வரும்
கடிகாரம்...
நான்!
______________________
தயவுசெய்து
எப்படியவது என்னை
உனக்குள்ளே
தொலைத்துவிடேன்!
______________________
அனைவருக்கும்
வெறும் எழுத்தும்
ககிதமுமாய் தெரியும்
என் எண்ணம்...
உனக்கு மட்டும் எப்படி
கவிதையாக?
______________________
என் உதட்டை
கடிப்பதற்காகவே
படைத்தானோ ஆண்டவன்
உனக்கு பற்கள்!
_____________________

1 comment:

Sankar Ganesh S said...

yaar aval enakku theriyamal