இன்று நண்பர்கள் அனைவரும் ஆதவன் படம் ஐமாக்ஸ்யில் பார்த்தோம். சரி எல்லாரும் ப்லாக் போடறாங்களே! நாமளும் போடுவம்னு எழுதின விமர்சனம்...
படமா இது... பப்படம். படம் பார்க்க போகும்போது நண்பர் சொன்னார் "நேத்து பூரா ஒரே தலை வலிடா. காலைலதான் சரி ஆச்சு. படம் புக் பண்ணினாயேன்னு வறேன்னர்". ஐயோ பாவம் அவர்! இன்னைக்கு தூங்கினப்போலதான்...
படத்தோட கதையா... சூர்யா கில்லர் ஹீரோ... ரோட்ல வரவன் போறவனையெல்லாம் சுடரார். பாரின் போய், யூரின் போய்ட்டே சுடறார். லெப்ட்ல சுடறாராம், ரைட்ல சுடறாராம்...(ஏம்பா இப்டி?) சாயாஜி அவரோடா அப்பா, அண்ணன் ஆனந்த் பாபு (யோவ்! ஏன்யா உனக்கு இந்த ஆசை? ) ஒரு பெரிய்ய கொலை குடும்பம்... சின்ன சின்ன கொலை பண்ணிட்டு இருந்தவங்களை, ஜட்ஜை கொல்ல சூர்யா போறார். அங்க குடும்பம்...
குடும்பத்துல ரெண்டு ஹீரோயின்... என்ன! மொத ஹீரோயின் சரோஜா தேவி அம்மா நயன்தாராவைவிட கொஞ்சம் இளமையா தெரியறாங்க...
வடிவேலு (நீ இல்லாட்டி படம் பார்த்த காச நண்பர்கள் திருப்பி கேட்டிருப்பாங்க) வேலைக்காரராம்... சூர்யா மிரட்டல்ல சூர்யாவை மச்சான்னு சொல்லி வீட்டில் சேர்த்து வீட்டில் இருந்தே ஜட்ஜை கொல்ல முயற்சிக்க, அதை நயந்தாரா கண்டுபிடிக்க... சூர்யா தான் ஜட்ஜின் ஒரே பையன்னு போகுது கதை. க்ளைம்ஸ்யில் ஒரு பெரிய ட்விஸ்ட்... சூர்யா இது எல்லாத்தையும் அவர் அப்பாவை காப்பாத்த பண்றாராம்.
என்னத்தை சொல்ல... இந்த ப்லாக் எழுதும்போதே தெரியலையா... எவ்வளவு கடுப்புல எழுதுறேன்னு...
2 comments:
ah y blood same blood
ah y blood same blood
Post a Comment